யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிக்க நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு வாரங்களில் அலுவலகம் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அலுவலகத்திற்குத் தேவையான தமிழ் பேசும் அரச உத்தியோகத்தர்களை தெரிவு செய்ய, கொழும்பிலிருந்து வந்த விசேட குழு, நேர்முகப் பரீட்சைகளை முன்னெடுத்து முடித்துள்ளது.
கடந்த தை மாதத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, யாழில் கடவுச்சீட்டு அலுவலகம் ஆரம்பிக்கப்படும் என அறிவித்தார். அப்போதே, அலுவலகத்துக்காக ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார்.
அலுவலகத்தின் ஒரு பகுதியாக, ‘ஒருநாள் சேவைக்கான வலைத்தள சேவை’ கோரப்பட்டிருந்தாலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து போதிய விண்ணப்பங்கள் வராததால், தென்னிலங்கையிலிருந்து சேவை வழங்குநர்கள் இணைக்கப்படவுள்ளனர்.
இவ்வாறு, வடமாகாண மக்களுக்கு கடவுச்சீட்டு மற்றும் குடிவரவு தொடர்பான சேவைகளை நேரில் வழங்கும் புதிய கட்டமைப்பு உருவாகிக்கொண்டிருக்கிறது.
0 Comments